புதன், அக்டோபர் 19, 2011

.

ஏகஇறைவனின் திருப்பெயரால்....

وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ

3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.



கலப்படம் சம்மந்தமான விவாதம்.
ஆக்சிடோஸின், கால்சியம் கார்பைடு, காப்பர் சல்பேட் என்ற ரசாயனப் பொருட்கள் காய்கறிகள், பழங்கள் கலர்த்தன்மையுடனும், வளர்ச்சியுடன் இருப்பதற்காக பயன்படுத்தப்படுகின்றன. இது உடனடியாக மனித உடலில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றாலும் நாளடைவில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். ஆக்டோசின் என்ற ரசாயனம் பெண்கள் பிரசவத்தின்போது வலியை ஏற்படுத்துவதற்காக பயன்படுத்தப்படுகிறது. இதை குழந்தைகளுக்கு, பெரியவர்களுக்கு பயன்படுத்துவதால் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். 
 
புற்றுநோய் வருவதற்கான காரணங்களில் கலப்பட உணவு முக்கிய காரணமாக அமைகிறது என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்களின் ஏகோபித்த கருத்தாக இருக்கிறது. கலப்படத்திற்கு குறைந்தபட்சம் 6 மாதம் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதம் என்றும் உடல் கேட்டையோ, மரணத்தையோ உண்டு பண்ணினால் கூடுதலாக ஐயாயிரம் ரூபாய் அபராதம்; வசூலிக்கப்படும் என்றும் இந்திய குற்றவியல் தண்டனை சட்டம் கூறுகிறது. கலப்படக்காரர்களை கட்டுப்படுத்த மத்திய அரசு தண்டனையை அதிகப்படுத்த வேண்டும் என்று டெல்லி மேல்சபையில் கலப்படம் பற்றிய விவாதத்தில் மேற்காணும் தகவலை கனிமொழி எம்.பி.கூறி உள்ளார். 

வேளாண்மைக்கு உகந்த இந்திய மண்.
இந்தியாவின் மொத்த நிலப்பரப்பளவில் 45 சதவிகித நிலப்பரப்பு வேளாண்மைக்கு உகந்ததாக இயற்கையாகவே அமையப் பெற்றிருக்கிறது, தாவரங்கள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான நைட்ரஜன்,பாஸ்பரஸ்,பொட்டாஸியம்,சுண்ணாம்பு,மக்னீஸியம் போன்ற அனைத்து சத்துக்களும் அமையப் பெற்றிருக்கிறது, சிலப்பகுதிகளில் மட்டும் மண்ணின் கலர்த்தன்மை, மற்றும் உவர்த்தன்மையில் மாற்றம் காணப்படுவதால், அங்கு மட்டும் மண்ணிற்கு தேவையான இயற்கை உரமிட்டு மாற்றலாம் (ரசாயன உரமல்லாமல்) என்று கோயம்புத்தூர் அக்ரிகல்ஸர் யுனிவர்சிட்டியின் தகவல் கூறுகிறது. Handbook of Agriculture, University of Agriculture, Coimbatore, Tamilnadu, India.

தாவரங்கள் செழிப்பாக வளர்வதற்கு தேவையான அனைத்து அம்சங்களும் இந்திய மண்ணில் இயற்கையாக அமையப்பெற்றிருந்தும் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்;கக் கூடிய ரசாயனங்கள் மூலம் காய்கறிகள் விளைச்சல் செய்யப்படுவதற்கு காரணம் என்ன

இயற்கையான விளைச்சலுக்காக குறிப்பிட்ட நாட்கள் காத்திருக்க வேண்டும், அதற்கான தரமிக்க உரங்களை கூடுதல் விலைக் கொடுத்து வாங்க வேண்டி வரும் என்பதால் கொள் லாபத்திற்காக கலப்படக் காரர்களால் இயற்கை வளம் மிக்;க இந்திய மண் ரசாயனத்தினால் இயந்திரமாக மாற்றப்பட்டு விட்டது.

இதனால் உடல் ஆரோக்கியம் கெடுவதுடன், வேளாண்மைக்கேற்ற மண்ணின் இயற்கைத் தன்மையும் பாழ்படுத்தப்படுகிறது. எங்காவது மண்ணின் கலர்தன்மை, மற்றும் உவர்தன்மை மாறி இருந்தால் கூட அதை மாற்றுவதற்கும் ரசாயனமல்லாமல் இயற்கை உரமிட்டு மாற்;றச்சொல்கின்றனர் வேளாண் அறிஞர்கள். 

அரிசி, பருப்பில் தொடங்கி ஆடு, மாடு, கோழிகளுக்கு ஊசிப்போட்டு வளர்ப்பது வரை ஊழல் செய்து  பழக்கப்பட்ட கலப்படக்காரர்கள் இயற்கையாக விளையும் காய்கறிகளையும் செயற்கையாக மாற்றி விட்டது பெரும் வேதனையை அளிக்கிறது. 

இந்த சகல கலா கலப்படக் காரர்களின் கைகளில் சிக்காதது கடல் மீன்கள் மட்டுமே என்பது ஓரளவு ஆறுதலை அளிப்பதாக இருக்கிறது. இந்த கலப்பட கும்பலிடமிருந்து உடல் ஆரோக்கியத்தை காக்க அதிகமாக மீனை உண்டு ஆரோக்கியத்தைப் பேணுங்கள். 

மயில் இறகால் வருடி விடும் தண்டனை.
எங்காவது கலப்படம் செய்யப்பட்ட, அல்லது காலாவதியான உணவுப் பொருளை உட்கொண்டு யாருக்காவது வாந்தி, பேதி ஏற்பட்டு அதனால் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் சில நாட்கள் சில ஊர்களில் சில கடைகளில் சோதனை நடத்தி அவைகளை ஊடகங்களில் வெளிப்படுத்திவிட்டு அத்துடன் ஓய்ந்து விடுகின்றனர் அதிகாரிகள்.  

மேற்படி சோதனையில் சிக்கிய கலப்படக்காரர்கள் கலப்படத்திற்காக இந்திய குற்;றவியல் சட்டம் தரும் மயில் இறகால் வருடும் தண்டனையையும், சாயா செலவு காசையும் அபராதமாக செலுத்திவிட்டு வெளியில் வந்து ஹாயாக மீண்டும் அவர்கள் அதையே சில மாற்றங்களுடன் அதிகாரிகளின் கண்ணில் படாதவாறு மறைத்து செய்யத் தொடங்கி விடுகின்றனர்.
கலப்படக் காரர்களை ஒழிப்பதற்கு தண்டனையை அதிகப்படுத்தும் படி மத்திய அரசை வலியுருத்திக் கூறி மேல்சபையில் கூறி இருக்கிறார் கனிமொழி.

இஸ்லாமிய குற்றவியல் தண்டனை மனிதாபமானமற்றது என்றெல்லாம் விமர்சிப்பவர்கள் குற்றவாளிpகளின் அட்டூழியம் அதிகரித்து சமூகத்தில் சீரழிவுகள் ஏற்படும்பொழுது இதற்கான முடிவைத்தேடி சிந்திப்பவர்களின் சிந்தனையில் இறுதியாக இஸ்லாமிய குற்றவியல் தண்டனை தான் சிறந்த தீர்வாக உதிப்பதை இதற்கு முன்பும் பலரது வாயில் மொழியக் கேட்டிருக்கிறோம்.  

கலப்பட ஜாம்பவான்ககளின் வர்த்தக உரிமம் ரத்து செய்யப்பட்டு வருடக் கணக்கில் கம்பி எண்ணும் சட்டம் இயற்றப்படாதவரை அவர்களாக திருந்தவே மாட்டார்கள். திருந்துவதற்கு தேவையான சட்டத்தை இயற்றா விட்டால் திருத்தவே முடியாது.  

தனக்காவும், தன்னுடைய சந்ததிகளுக்காவும் பேரவாக் கொண்டு முறைதவறி பொருளீட்டுபவர்களுக்கு இஸ்லாம் கூறும் எச்சரிக்கை.

'ஒருவன் விலக்கப்பட்ட வழியில் செல்வத்தை ஈட்டி, அதிலிருந்து இறைவழியில் செலவு செய்தால் அந்த தர்மம் இறைவனிடம் ஏற்றுக்கொள்ளப்படாது. தனக்காகவும் தன் வீட்டாருக்காகவும் அதிலிருந்து செலவிட்டால் பாக்கியம் அற்றதாகவே இருக்கும். அதனை விட்டு விட்டு அவன் இறந்துவிட்டால் அவனது நரகப் பயணத்திற்குத்தான் அது சாதகமாக இருக்கும். அல்லாஹ் தீமையை தீமையின் வாயிலாக அழிப்பதில்லை. மாறாக தீய செயலை நற்செயலின் வாயிலாக அழிக்கின்றான். ஓர் அசுத்தம் இன்னோர் அசுத்தத்தை அழிப்பதில்லை.' என்று நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் கூறியதாக அப்துல்லாஹ் இப்னு  மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: (மிஷ்காத்)

உணர்வுக்கு எழுதியக் கட்டுரை


وَلْتَكُن مِّنكُمْ أُمَّةٌ يَدْعُونَ إِلَى الْخَيْرِ وَيَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنكَرِ وَأُوْلَـئِكَ هُمُ الْمُفْلِحُونَ
3:104. நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.... அன்புடன் அதிரை ஏ.எம்.பாரூக்